சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், சைதாபேட்டை, கிண்டி, ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காலை முதல் பெய்து வரும் மழை காரணமாக வாகன ஓட்டிகளும், அலுவலகம் செல்வோரும் சற்று சிரமம் அடைந்துள்ளனர்.
அதே சமயம், மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க:சமூகநலத் துறையில் வேலை: வெளியான அரசின் அறிவிப்பு