ஈரோட்டில் பெரியாருக்கு மூன்று சிலைகள் இல்லை; 300 சிலைகள் வைக்கலாம் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத் திருமண விழா, ஈரோட்டில் உள்ள மேட்டுக் கடையில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது நிகழ்ச்சி முதல்வர் பேசியபோது, மக்களால் நேராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அப்போதும் மழை பெய்தது; அதேபோல், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மழை பெய்து கொண்டே இருக்கிறது என்றும் அது நம்ம ராசி… என் ராசி மட்டும் இல்லை… உங்கள் ராசியும் சேர்த்து தான் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இது பெரியார் பிறந்த மண் என்றும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் குருகுலம் என்றும், இங்கு பெரியாருக்கு மூன்று சிலைகள் இல்லை 300 சிலைகள் கூட வைக்கலாம் என்றும் கூறினார்.
மேலும், முதல்வர் திமுக ஆட்சிக்கு வரும் முன் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இது எனவும் தெரிவித்தார்.
திருமண விழாவில் அமைச்சர்கள் சூ.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தலைமையாசிரியர் கொடுத்த தண்டனை ? பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து உயிரைவிட்ட மாணவன்