Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்எடப்பாடி பழனிச்சாமி திருந்தி வந்தால் ஏற்று கொள்ள நாங்கள் தயார்: டி டி வி தினகரன்

    எடப்பாடி பழனிச்சாமி திருந்தி வந்தால் ஏற்று கொள்ள நாங்கள் தயார்: டி டி வி தினகரன்

    எடப்பாடி பழனிச்சாமி திருந்தி வந்தாலும் ஏற்று கொள்வேன், திருந்தி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனபக்குவம் எங்களுக்கு உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், புதிய துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட கடம்பூர் மாணிக்கராஜா, தேர்தல் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள குமரேசன் உள்ளிட்டோர் பதவி ஏற்று கொண்டனர்.

    பின்னர் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்று தான் கூறினேன். அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிச்சாமி உடன் சேருவோம் என்று நான் எங்கேயும் கூறியது இல்லை.

    இதையும் படிங்க: 80 ஆயிரம் பேருக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வு: மத்திய ரயில்வே துறை அறிவிப்பு

    மெகா கூட்டணி என்று பேசுபவர்களும் அடுத்தவர்களை தாழ்த்தி பேசுபவர்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். பழனிசாமியின் பேச்சு விரக்தியின் உச்சமாக உள்ளது. அதிமுக இன்று தலையில்லா முண்டமாக உள்ளது.

    திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்பதை தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் தேர்வில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணிலை போல செயல்படுவோம்.

    அதிமுகவில் ஒரே கட்சிக்கு ஒரு மாவட்டத்தில் இரண்டு செயலாளர்கள் இருக்கும் நிலை இருக்கிறது. வருங்காலத்தில் அவர்களது நிலையை அவர்கள் உணரும் காலம் வரும். பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக தமிழகத்தில் நாங்கள் இருப்போம்
    எங்கள் இயக்கம் இலக்கை எட்டும் வரை தொடர்ந்து போராடுவோம்.

    பழனிசாமி தலைமையில் கூட்டணி வரும் என்பதை நான் நம்பவில்லை
    இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் நகராட்சி தேர்தலில் கூட எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற முடியாது.தனித்து நிற்க கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லை. தமிழகம் முழுவதும் இருந்த கட்சியை வட்டார கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி. சுய நலத்திற்காக பதவிக்காக காலில் விழுவது, கழுத்தை பிடிப்பது, பழி வாங்குவது போன்ற பழக்கம் எங்களுக்கு இல்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நானும் அவரை சந்திப்பேன்.
    எடப்பாடி பழனிச்சாமி திருந்தி வந்தாலும் ஏற்று கொள்வேன், திருந்தி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனபக்குவம் எங்களுக்கு உள்ளது என்று கூறினார்.

    இதையும் படிங்க: ரூ.24.71 கோடி செலவில் 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், வளாகங்கள் திறப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....