தண்ணீரில் மூழ்காமல் பல்லி நடந்தவாறு செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு விலங்குகளும் பறவைகளும் வித்தியாசமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. நிறம், வடிவம், செயல், இருப்பிடம் என அணைத்து வகையிலும் ஒவ்வொன்றும் ஒரு ரகமாக இருக்கிறது. சில விலங்குகள் மற்றும் பறவைகளை பற்றி நமக்கு நன்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும் அவற்றில் தெரியாத பல செய்திகள் நமக்கு சுவாரஸ்யமானதாக மாறிவிடுகிறது.
அந்த வகையில், ஊர்வன இனத்தை சேர்ந்த பசிலிஸ்க் என்ற பல்லி தண்ணீரில் நடக்கும் காட்சிகள் ஆச்சர்ய அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளி காட்சியை ஐபிஎஸ் அதிகாரி சுசாந்த நந்தா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அந்தப் பல்லி நீர்நிலையில் நடுவில் உள்ள கிளை ஒன்றில் இருந்து தண்ணீரில் குதிக்கிறது. பிறகு, தண்ணீரில் மூழ்காமல் வேகமாக அடுத்த கரை பக்கம் செல்கிறது. இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தக் காணொளியில் சுசாந்த நந்தா, நீர் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் சமயம் உருவாகும் மேற்பரப்பு இழுவிசையின் காரணமாக சிறிய விலங்குகள் தண்ணீரில் மூழ்காமல் நடக்க முடிவதாக விளக்கம் அளித்துள்ளார்.
Physics at work…
Surface tension,the force created when water molecules cling together, becomes dominant, allowing small animals to walk effortlessly over water bodies. pic.twitter.com/LqjTU6vEUt
— Susanta Nanda (@susantananda3) November 30, 2022