விராட் கோலி உயர்தர உணவகத்தை திறக்க இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
விராட் கோலி உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பதில் மாற்று கருத்தே இருக்காது. அந்தளவுக்கு இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நட்சத்திரமாக விராட் கோலி வலம் வருகிறார்.
இந்நிலையில், தற்போது இந்திய அணி பங்கேற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறார். இந்த நிலையில், இவர் மும்பையில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம், மும்பையில் உள்ள மறைந்த பாலிவுட் பாடகர் கிஷோர் குமாரின் பங்களாவில் விராட் கோலி உயர்தர உணவகத்தை திறக்கிறார். இதனை கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் தெரிவித்துள்ளார். இந்த உணவகம் எந்த நேரத்திலும் திறக்க தயாராக உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இனி பிறக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் உதவித்தொகை – தென்கொரியா அதிரடி முடிவு