Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா"KGF ராக்கி" ஆக ஆசைப்பட்டு சீரியல் கில்லராக மாறிய 19 வயது இளைஞன்

    “KGF ராக்கி” ஆக ஆசைப்பட்டு சீரியல் கில்லராக மாறிய 19 வயது இளைஞன்

    திரைப்படங்கள் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இல்லை, அப்படி இல்லை என்ற வாதம் தொடர்ந்து வந்தாலும், பெருவாரியான மக்களிடத்தில் திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் அதிகமானது. தொன்று தொட்டே கலையின் வழியாகத்தான் அரசியல், நாகரிகம், கருத்து, விருப்பம் என பலவையும் பகிரப்பட்டு வருகிறது. இப்படியான கலைகளுள் ஒன்றுதான், திரைப்படங்களும். 

    தற்காலத்தில், திரைப்படங்களின் வாயிலாக அரசியல் பேசுவது, வரலாற்றை பேசுவது அதிகமாகியுள்ளது. வரலாற்று புனைவு திரைப்படங்களும் அதிகளவில் வந்த வண்ணமிருக்கின்றன. அந்த வகையில், சமீபத்தில் வெளிவந்த கேஜிஎஃப் திரைப்படம் வரலாற்று புனைவுச் சார்ந்த ஒன்றுதான். 

    இந்த கேஜிஎஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பலர் இந்த திரைப்படத்தை பார்த்து சிலாகித்தனர். இத்திரைப்படத்தில் உள்ள காட்சிகளை மறு உருவாக்கம் செய்தல், படத்தின் வசனங்களை பேசுதல் என கேஜிஎஃப் சார்ந்து பல நிகழ்வுகளை சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை தற்போது நிகழ்த்தி வருகின்றனர். 

    அந்த வகையில் கொடூரமான ஒரு விஷயமும் தற்போது அரங்கேறியிருக்கிறது. ஆம், அரங்கேறியவைகள் கொலைச்சம்பவங்களாகும். இந்த கொலைகள் போபாலில் இருந்து தொடங்கியது . கடந்த மே மாதம் மேம்பால கட்டுமான தளத்தில் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது முகத்தில் ஷூ வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த இடத்தில் எதுவும் கொள்ளை போகவில்லை. அதேபோல ஆகஸ்ட் 28-ம் தேதி கல்யாண் லோதி எனப்படும் தொழிற்சாலை ஒன்றின் காவலாளி கொல்லப்பட்டார். அதன்பின்பு, கலை மற்றும் வணிகக் கல்லூரியின் காவாலாளி கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். 

    இதனால், மத்திய பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்த கொலைகள் அனைத்தும் இரவிலேயே நடந்தது. அதேபோல உயிரிழந்தவர்கள் அனைவரும் காவலர்கள். மேலும், இவர்கள் அனைவரும் தூக்கத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதால் ‘கல் மனிதன்’ குறித்த அச்சம் கொலை நடந்த பகுதிகளில் வேகமாக பரவியது.

    இதைத் தொடர்ந்து தீவிர தேடுதலுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த இளைஞன்தான் 5 கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது..

    அந்த இளைஞனை பிடித்து விசாரித்ததில் ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் வருவதை போல தானும் விரைவில் பிரபலமாக வேண்டும் என்று அவன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்வு தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....