Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசெவிலியரை கடித்து குதறிய நிர்வாண இளைஞர் - விருதுநகரில் பரபரப்பு

    செவிலியரை கடித்து குதறிய நிர்வாண இளைஞர் – விருதுநகரில் பரபரப்பு

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரத்தில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்று மருத்துவர்கள் ஐந்து செவிலியர்கள், நான்கு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு, ஆள் இல்லாத நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் அங்கு மருந்தகத்தில் உள்ள மருந்து மாத்திரைகள் அனைத்தையும் கீழே தள்ளி விட்டு உள்ளார். தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் தனது உடைகள் அனைத்தையும் கழற்றி எறிந்துவிட்டு அந்த இளைஞர் அங்கேயே நிர்வாணமாகச் சுற்றிவந்திருக்கிறார்.

    சத்தம் கேட்டு தங்கும் விடுதியிலிருந்து அங்கு வந்த செவிலியர் மீது, நிர்வாண இளைஞர் பாய்ந்து அவரை பலவந்தப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அந்த செவிலியரை கடித்து குதறி உள்ளார். வலியில் கதறி துடித்த செவிலியரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து உள்ளனர். இதற்குள், அந்த இளைஞர் விடுதிக்குள் சென்று செவிலியர் அணியும் உடையை எடுத்து மாட்டி கொண்டு உள்ளார்.

    விடுதிக்குள் சென்று ஆட்கள் அந்த இளைஞரை சுற்றிவளைத்ததும், சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த விருதுநகர் காவல் நிலைய போலீஸார், அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் பெயர் மணிகண்டன் என்றும் பாளையம்பட்டியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்து உள்ளது. காயம் அடைந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....