Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமகளின் கண் முன்னே தந்தையை அடித்த போக்குவரத்து ஊழியர்கள்.. தீயாய் பரவும் தாக்குதல் சம்பவம்

    மகளின் கண் முன்னே தந்தையை அடித்த போக்குவரத்து ஊழியர்கள்.. தீயாய் பரவும் தாக்குதல் சம்பவம்

    பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க சென்ற மாணவியின் தந்தையை அவரது முன்பே போக்குவரத்து துறை அதிகாரிகள் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லூரி ஒன்றில் மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். அவர் பேருந்து பயண அட்டையைப் புதுப்பிக்க அவரது தந்தையுடன் சென்றுள்ளார். அப்போது, கல்லூரி சான்று வேண்டுமென போக்குவரத்து அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டிற்குள் மிதந்த ‛ஈ’ – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி – வைரல் வீடியோ

    ஏற்கனவே மாணவியின் தரப்பில் கல்லூரி சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கல்லூரி சான்றிதழ் கேட்ட காரணத்தினால் மாணவியின் தந்தைக்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    இந்த வாக்குவாதத்தில் மாணவியின் கண் முன்பே அவரது தந்தையை போக்குவரத்து அதிகாரிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த அவர் கட்டுக்காடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....