பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க சென்ற மாணவியின் தந்தையை அவரது முன்பே போக்குவரத்து துறை அதிகாரிகள் தாக்கிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கல்லூரி ஒன்றில் மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். அவர் பேருந்து பயண அட்டையைப் புதுப்பிக்க அவரது தந்தையுடன் சென்றுள்ளார். அப்போது, கல்லூரி சான்று வேண்டுமென போக்குவரத்து அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டிற்குள் மிதந்த ‛ஈ’ – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி – வைரல் வீடியோ
ஏற்கனவே மாணவியின் தரப்பில் கல்லூரி சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் கல்லூரி சான்றிதழ் கேட்ட காரணத்தினால் மாணவியின் தந்தைக்கும் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் மாணவியின் கண் முன்பே அவரது தந்தையை போக்குவரத்து அதிகாரிகள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த அவர் கட்டுக்காடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.