Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபாம்பன் பாலத்தில் அதிர்வு; ரயில்கள் இயக்கப்படமாட்டாது..

    பாம்பன் பாலத்தில் அதிர்வு; ரயில்கள் இயக்கப்படமாட்டாது..

    பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்து டிசம்பர் 31 வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

    பாம்பன் பாலம் வழியே ரயில்கள் செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை பாம்பன் பாலம் வழியே ரயில் செல்லும்போது, பாலத்தில் இருந்து வழக்கமான அளவை விட அதிகமான அளவில் அதிர்வுகள் ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனின் முன்னோட்டமாக, நேற்று காலி பெட்டிகளை இயக்கி ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வைத் தொடர்ந்து, டிசம்பர் 31ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்றார் போல பயணிகள் தங்களது பயணத்தை முடிவு செய்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    நடிகர்கள் மட்டும் இல்லைங்க…இவுங்களும்தான் மோதிக்குறாங்க..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....