மாமல்லபுரத்தில் சுற்றிப் பார்க்க வந்த முன்னாள் குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டியாக இருந்த நபர் சில மணி நேரத்தில் விபத்தில் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுலா வந்தார். இவருக்கு மாமல்லபுரம் வெண்புருஷம் பகுதியைச் சேர்ந்த பால கிருஷ்ணன் என்பவர் வழிகாட்டியாக இருந்தார்.
பால கிருஷ்ணன் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணை கல் உள்ளிட்ட பழமை வாய்ந்த புராதான சின்னங்களைச் சுற்றிக் காண்பித்தார். மேலும் பால கிருஷ்ணன் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு இந்தி மொழியில் விரிவாகவும் எடுத்து கூறி அசத்தினார். மாமல்லபுரம் முழுவதையும் சுற்றி பார்த்த பிறகு, ராம்நாத் கோவிந்த் விடைபெறும் போது, பால கிருஷ்ணனை மனமார பாராட்டிவிட்டு சென்றார்.
இதையடுத்து நேற்று இரவு 7 மணி அளவில் பால கிருஷ்ணன் தனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த நிலையில், ஐந்துரதம் அருகே சென்றுக்கொண்டிருந்த சமயத்தில், சாலையில் பன்றி ஒன்று குறுக்கே சென்றது. இதன் காரணமாக நிலைத் தடுமாறிய பால கிருஷ்ணன் அருகே உள்ள சிமெண்ட் சாலையில் விழுந்தார். இதையடுத்து இதில் படுகாயம் அடைந்த பால கிருஷ்ணன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏகே-62 படப்பிடிப்பு எப்போது? – வெளிவந்த தகவல்