Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅரக்க கும்பலின் சித்ரவதை; பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு அச்சத்தில் ஓடிய குட்டி யானை..

    அரக்க கும்பலின் சித்ரவதை; பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு அச்சத்தில் ஓடிய குட்டி யானை..

    அசாம் மாநிலத்தில் குட்டி யானை ஒன்றை ஒரு கொடூர கும்பல் தாக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள லங்கா நகரின் ஹல்பகன் என்ற பகுதியில் குட்டியானை ஒன்று கடந்த 12 ஆம் தேதி வழி தவறி அந்தப் பக்கம் சென்றதாக சொல்லப்படுகிறது. 

    அந்த சமயத்தில் தனியாக தவித்தபடி நின்ற குட்டி யானையை அப்பகுதி மக்கள் விரட்டி அடித்து துன்புறுத்தினர். தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த குட்டி யானையை வாலைப் பிடித்து இழுத்தும், மனித நேயம் என்பதே இல்லாமல் அடித்தும் கொடுமைப்படுத்தினர். 

    தனது உயிரைக் காத்துக்கொள்ள வேண்டுமென்ற அச்சத்தில் பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் ஓடி, அந்த இடத்திலிருந்து அந்தக் குட்டி யானை தப்ப முயன்றது. 

    தற்போது இந்தக் காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் கண் கலங்க வைக்கும் வகையில் காணொளியாக இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இதுபோன்று விலங்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நடத்துவது முதல் முறை இல்லை. இதுமாதிரியான கொடூர செயல்களில் ஈடுபடுவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: 142-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாம்பு; மீண்டும் வந்தது எப்படி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....