வீரம் புண்ணாக்குன்னு நம்புறவன மட்டுமில்ல, நம்ப வச்சவனையும் சேர்த்து தண்டிக்கணும் என நடிகை கஸ்தூரி ட்விட் செய்துள்ளார்.
சென்னை கிண்டிக்கு அருகில் உள்ள பகுதிதான் ஆதம்பாக்கம். இப்பகுதியைச் சேர்ந்த சதீஷிற்கு வயது 23. இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயதான சத்தியா என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வழக்கம்போல் ஆதம்பாக்கம் அருகிலுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையில் ஏதோ தகராறு ஏற்பட்டு அதனால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது.
இதையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த ரயில் முன் மாணவி சத்தியாவை, சதீஷ் தள்ளவிட்டதாக கூறப்படுகிறது. ரயிலில் சிக்கிய சத்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீவிர தேடுதலுக்குப் பின் தலைமறைவான சதிஷ் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே நடைபெற்ற விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், கைது செய்யப்பட்டுள்ள சதிஷ் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பதும் தெரிய வந்தது. இதன்பிறகு, உயிரிழந்த மாணவி சத்தியாவின் தந்தை மாணிக்கத்திடம் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் வீரர்களுடன் இப்படித்தான் பேசிக்கொள்வோம் – ரோஹித் உற்சாக பேச்சு!
மகள் சத்தியா கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாணிக்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவர்களின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி இந்நிகழ்வு குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், சத்தியாவின் கொடூரமான கொலையை கேள்விப்பட்ட அவரது அப்பா மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் தாய் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார், சதீஷின் தந்தை அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். போலீசுக்கே இந்த கொடுமைனா என்னத்த சொல்லுறது.. என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கஸ்தூரி தனது மற்றொரு பதிவில், ‘விருப்பமில்லாத பெண்ணை தொடர்ந்து torture பண்ணுறது விடாமுயற்சி, வீரம் புண்ணாக்குன்னு நம்புறவன மட்டுமில்ல, நம்ப வச்சவனையும் சேர்த்து தண்டிக்கணும். அது எந்த தலைவனா இருந்தாலும் சரி, சினிமாவா இருந்தாலும் சரி . வயிறெரியுது.’ என்று தெரிவித்துள்ளார்.