Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் புதுவகை கிரிக்கெட் போட்டி....உற்சாகத்தில் ரசிகர்கள்!

    இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் புதுவகை கிரிக்கெட் போட்டி….உற்சாகத்தில் ரசிகர்கள்!

    இந்தியாவில் ‘சூப்பர் 10’ எனப்படும் தனித்துவமான கிரிக்கெட் போட்டி இந்த வருடம் டிசம்பரில் நடைபெற உள்ளது. 

    பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும், சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு, இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக தற்போது வலம் வருபவர், கிச்சா சுதீப். அதேபோல வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 

    இந்நிலையில், இருவரும் இணைந்து ‘சூப்பர் 10’ என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் தொடரை அறிவித்தனர். அதென்ன ‘சூப்பர் 10’ அப்படியென்றால்? இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இதுவே ‘சூப்பர் 10’ போட்டி எனப்படும். இப்போட்டிகள் இந்த வருடம் டிசம்பர் மாதம் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.

    இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர். இதை தொடங்கி வைத்த கிறிஸ் கெய்ல் எப்போது டிசம்பர் வருமென காத்திருப்பதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: 142-ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாம்பு; மீண்டும் வந்தது எப்படி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....