Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகாலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

    காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தயாரா?

    நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. 

    நில அளவைத் துறையில் நில அளவர், வரைவாளர் பணியிடங்கள், ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, கட்டடப் பொறியியல் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள், சம்மந்தப்பட்ட தொழிற்துறைகளில் தேசிய தொழிற் பயிற்சி அமைச்சகத்தால் சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு, ஆகஸ்ட் 24-ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணியிடங்களுக்கான கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் 06. 11. 2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக் கட்டணமாக ரூ.100 விதிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையப்பக்கத்தை காணவும்; https://www.tnpsc.gov.in/Document/english/FS%20&%20DM%20English.pdf

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....