நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
நில அளவைத் துறையில் நில அளவர், வரைவாளர் பணியிடங்கள், ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 1089 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கட்டடப் பொறியியல் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள், சம்மந்தப்பட்ட தொழிற்துறைகளில் தேசிய தொழிற் பயிற்சி அமைச்சகத்தால் சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு, ஆகஸ்ட் 24-ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணியிடங்களுக்கான கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள் 06. 11. 2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக் கட்டணமாக ரூ.100 விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையப்பக்கத்தை காணவும்; https://www.tnpsc.gov.in/Document/english/FS%20&%20DM%20English.pdf