பீகாரில் 2 கிலோ மீட்டர் தூரம் அளவிலான ரயில்வே தண்டவாளத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், சமாஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பாண்டோல் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அளவிலான ரயில் தண்டவாளத்தை திருடிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து தர்பங்கா ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென குழு அமைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வழக்கில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் 2 கிலோ மீட்டர் தூரம் ரயில்வே தண்டவாளம் திருடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். திருடப்பட்ட தண்டவாளம் லோகத் சர்க்கரை ஆலையை, பாண்டோல் ரயில் நிலையத்துடன் இணைக்கப் பயன்படுத்தப்பட்டன.
மேலும் சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக அப்பாதையில் எந்த ரயில் இயக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கை கால்களில் சூடு… கண்களில் மிளகாய் பொடியை தூவல் – தாயே மகனை கொடுமைப்படுத்திய அவலம்!