Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் பரபரப்பு; பிரபல ரௌடி வெட்டிப் படுகொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல்

    சேலத்தில் பரபரப்பு; பிரபல ரௌடி வெட்டிப் படுகொலை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல்

    சேலத்தில் பிரபல ரௌடியை ஆறு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சேலம் மாவட்டம், காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரௌடி காட்டூர் ஆனந்தன். இவருக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

    இந்நிலையில், காட்டூர் பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி உறவினர் பிரபாகரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஆனந்தன் சென்றார். அங்கு சென்ற இவர்கள் இரவு 11 மணிக்கு அங்கிருந்து திரும்பியுள்ளனர். 

    அப்போது இவர்கள் காட்டூர் சுடுகாடு பகுதி அருகே சென்றுக் கொண்டிருந்தபோது வழிமறித்த 6 பேர் ஆனந்தன் மற்றும் பிரபாகரனை ஆயுதங்களால் தாக்கினர். மேலும் இதில் ஆனந்தனை கொடூரமாக கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், மாநகர காவல் துணை ஆணையாளர் லாவண்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டனர். 

    இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பிரபாகரன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரௌடி காட்டூர் ஆனந்தன் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? மேலும் கொலை செய்த கும்பல் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    கொலை செய்யப்பட்ட பிரபல ரௌடியான காட்டூர் ஆனந்தன் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    உள்ளாடையை ஏலம் விட முயன்ற பிரபல பாடகி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....