Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகை கால்களில் சூடு... கண்களில் மிளகாய் பொடியை தூவல் - தாயே மகனை கொடுமைப்படுத்திய அவலம்!

    கை கால்களில் சூடு… கண்களில் மிளகாய் பொடியை தூவல் – தாயே மகனை கொடுமைப்படுத்திய அவலம்!

    கேரளாவில் 7 வயது மகனின் கை கால்களில் சூடு வைத்து கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடுமைப்படுத்திய தாயை காவல்துறையினர் கைது செய்தனர். 

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே அட்டப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன். இவன் பக்கத்து வீட்டிலிருந்து டயர் ஒன்றை எடுத்து வந்து தனது வீட்டின் வயலில் வைத்து எரித்துள்ளான். 

    இதனைக் கவனித்த சிறுவனின் தாய் குழந்தையை சரமாரியாக அடித்துள்ளார். அதோடு நிறுத்தாமல், தோசை கரண்டியை அடுப்பில் காய வைத்து தனது மகனின் கை மற்றும் கால்களில் சூடு வைத்துள்ளார். 

    இதுமட்டுமின்றி, மகனின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவியுள்ளார் அந்தத் தாய். இந்தக் கொடுமைகளை தாங்க முடியாத சிறுவன் கதறி அழவே, இதனைப்பார்த்த பெண் ஒருவர், பஞ்சாயத்து உறுப்பினரின் வாயிலாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். 

    பிறகு, காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தியதில், அந்தச் சிறுவனின் தாய் அவனுக்கு பலமுறை சூடு வைத்தது தெரியவந்தது. அங்கிருந்து சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதோடு, அச்சிறுவனின் தாய் மீது குமுளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இரட்டை இலை சின்னம் வெற்றியடைய வேண்டும்; வாபஸ் பெற்ற ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....