Sunday, March 24, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி நகைக்கடையில் திரைப்பட பாணியில் கொள்ளை

    10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி நகைக்கடையில் திரைப்பட பாணியில் கொள்ளை

    திரைப்படங்களில் வருவது போல உத்தர பிரதேச மாநிலத்தில் நகைக்கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

    உத்தர பிரதேச மாநிலம், மீரட் நகரில், நகைக்கடை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் சுமார் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    பியூஷ் கார்க் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை எப்போதும் போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடை திறக்க சென்ற அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

    அவரது கடையில் இருந்த 15 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் நாவுசாண்டி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையர்கள் நகைக்கடைக்குள் செல்வதற்காக சுமார் 10 அடி பூமிக்கு அடியில் தோண்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    நகைக்கடைக்குள் செல்ல சாக்கடைகுழாயை சுரங்கம் தோண்ட தேர்வு செய்துள்ளனர். இதற்கு என கொள்ளையர்கள் செங்கற்களை முதலில் எடுத்துவிட்டு பின்னர் மண்ணை தோண்டியுள்ளனர். கடந்த திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கு முன்பாக நகைக்கடைக்குள் சென்று கொள்ளையடித்துள்ளனர். 

    மேலும் இந்தச் சம்பவம் குறித்து நாவுசாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    கலாஷேத்ரா விவகாரம்; போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புதல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....