500 மாணவிகளுக்கு மத்தியில் தனி ஒரு மாணவனாக அமர வைக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், ஷெரிப் அல்லாமா இஃபால் கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், நேற்று முன்தினம் நாளந்தா அருகே உள்ள பிரில்லியண்ட் பள்ளியில் இண்டெர் மீடியட் தேர்வு எழுத சென்றார். அப்போது அந்த மாணவரைத் தவிர 500 மாணவிகள் தேர்வெழுத வந்தனர். இந்நிலையில் தேர்வறைக்குள் மணி சங்கர் என்னும் மாணவர் 500 மாணவிகள் மத்தியில் அமரவைக்கப்பட்டார்.
அத்தனை மாணவிகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்டதும் அவருக்கு பதற்றத்தில் மயக்கம் ஏற்பட்டது. அதே நேரம் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் சத்தார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணி சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தற்போது அவர் நலமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
500 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர், பதற்றத்தால் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
2011-இல் நடந்த குண்டுவெடிப்பு; இன்று தொடங்கிய விசாரணை!