சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக எழிலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சேப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது எழிலக கட்டிடம். இந்தக் கட்டிடத்தில் வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட தமிழக அரசின் பல துறைகளின் முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே எழிலக கட்டிடத்தின் மேற்கூரை இடித்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே சென்னை பாரிமுனையில் 200 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் சங்கர் என்ற நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொதுப்பணித்துறை வளாகத்திலேயே பழுதடைந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கும் முன்னதாக கடந்த வாரம் சென்னையில் இரண்டு இடங்களில் ஒருவர் மழை காரணமாக மின்சாரம் தாக்கியும், மற்றொரு பெண்மணி குடியிருப்பு சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதையும் படிங்க: தனுஷ் பாட, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க ரசிகர்களை கவரும் வகையில் வெளிவந்த வீடியோ!