Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷ் பாட, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க ரசிகர்களை கவரும் வகையில் வெளிவந்த வீடியோ!

    தனுஷ் பாட, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க ரசிகர்களை கவரும் வகையில் வெளிவந்த வீடியோ!

    நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில், சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி..வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இதைத்தொடர்ந்து, ‘வாத்தி’ திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. 

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அக்காணொளியில் நாளை வெளியாகவுள்ள பாடலை தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பாடுகிறார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘வா வாத்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ள அப்பாடலிற்கு சுவேதா மோகன் குரல் கொடுக்க, நடிகர் தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

    மேலும், ராக்கி, சாணிக்காயிதம் என வெற்றித்திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் தனுஷ் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ‘கே.ஜி.எஃப். 2’ பாடல் விவகாரம்: டுவிட்டர் கணக்குகள் முடக்க உத்தரவு.! காங்கிரஸ் மேல் முறையீடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....