Friday, March 15, 2024
மேலும்
    Homeவானிலைகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை..! பாலச்சந்திரன் பேட்டி

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை..! பாலச்சந்திரன் பேட்டி

    வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்க கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வரும் நவம்பர் 12ம் தேதி வரை வடமேற்கு திசையில், தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 9ம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ம் பத்தாம் தேதி அனேக இடங்களிலும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

    கனமழை பொறுத்தவரையில், 9, 10 தேதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 11, 12 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் ஆறு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதையும் படிங்க:நடுரோட்டில் கண்டெய்னர் லாரியில் வந்த விமானம்! அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பொதுமக்கள்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்குளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்காள பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் 12ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பொறுத்தவரையில் 10ஆம் தேதி நகரின் ஒரு சில பகுதியில் கனமழையும், 11, 12 தேதிகளில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், 13ஆம் தேதி ஒரு சில பகுதியில் கனமழையின் பெய்யக்கூடும். புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை, 13 தேதி வரை மழை பெபெய்துள்ளது. கரையை ஒட்டி வரக்கூடும் என்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும், சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

    வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் 01 ஆம் தேதி முதல் இன்று வரை(09/11/2022) தமிழ்நாட்டில் 23.7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பளவு 24.3 செ.மீ இது இயல்பை விட இரண்டு சதவீதம் குறைவு.ஆனால் சென்னையில் இந்த காலகட்டத்தில் 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது இந்த காலகட்டத்தில் இயல்பளவு 40.5 சென்டிமீட்டர் இது இயல்பை விட 13 சதவீதம் கூடுதலாகும் என கூறினார்.

    இதையும் படிங்கஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரிய மனுவை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்த திமுக!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....