Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரிய மனுவை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்த திமுக!

    ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற கோரிய மனுவை குடியரசு தலைவரிடம் ஒப்படைத்த திமுக!

    தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்பக் பெறக் கோரிய மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக திமுக தலைமையகம் அறிவித்துள்ளது. 

    முன்னதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, தங்களது கூட்டணி சார்ந்த கட்சிகளுக்கு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மனுவில் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, பலரும் கையெழுத்திட்டனர். 

    இந்நிலையில் மனு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பக் பெறக் கோரிக்கை மனுவானது இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது என்று திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது. 

    குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தமிழகம் வெவ்வேறு மதம், மொழி, சாதியைப் பின்பற்றுவர்கள் அமைதியாக வாழும் சொர்க்கம். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கைகள் மீது தமக்கு இருக்கும் அவநம்பிக்கையை வெளிப்படையாக பிரச்சாரம் செய்கிறார். பிரிவினையை தூண்டும் வகையில் பேசுகிறார். இது அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை உருவாக்குகிறது. 

    தமிழக அரசு, தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கையில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஆனால் ஆளுநர் அபாயகரமான, பிரிவினைவாத, மதவாத பிரச்சாரங்களை பொதுவெளியில் முன்னெடுக்கிறார். அவரது பேச்சுக்கள் திட்டமிட்டு வெறுப்பை உள்ளடக்கியுள்ளன. 

    அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, இந்தியா உலகின் மற்ற நாடுகளைப் போல் ஒரு மதத்தை சார்ந்துள்ளது என்று கூறியிருந்தார். அவருடைய இந்தப் பேச்சு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்தியா அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களையே சார்ந்து இருக்கிறது தவிர எந்த மதத்தையும் சார்ந்து இல்லை. 

    அதுபோல் ஆளுநர் சனாதன தர்மத்தைப் போற்றியும், உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு மதச்சாயம் பூசியும் பேசியுள்ளார். தமிழ் உணர்வுகளையும், மாண்பினையும் காயப்படுத்தியுள்ளார்.

    ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். மீண்டும் பதவி கிட்டுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆளுநரின் கவனம் எல்லாம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். முதல்வர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளை ஆதரிப்பவராக இருக்க வேண்டும். ஆளுநர் ரவி தான் தேர்தலில் வெற்றி பெற்றவர் இல்லை என்பதை மறந்து செயல்படுகிறார். 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் அவர் சட்ட மசோதாக்கள் மீது எந்தவித முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது குறித்தும் குறிப்பிட்டு, அரசியல் சாசன சட்டப்பிரிவு 159 கீழ் தான் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் மீறியதால் அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: என்ன ‘சந்திர கிரகணம்’ சுத்தமா தெரியலயா? அபூர்வ நிகழ்வை பார்க்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மழை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....