புது தில்லி: கடந்த சில தினங்களாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாகவே குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைத்து வெறும் 811பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய முன்தின பாதிப்பு 937 ஆக இருந்த நிலையில், நேற்று சற்று குறைந்து 625 ஆக பதிவானது.இந்நிலையில் இன்றைய பாதிப்பானது நேற்றைய பாதிப்பை விட கொஞ்சம் அதிகரித்து 811 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (நவம்பர் 09) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,62,952 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,559 ஆக உள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 02 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,511 ஆகவே உள்ளது.
தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,18,882
ஆக அதிகரித்துள்ளது .
தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இன்று ஒரு நாளில் மட்டும் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 70,678 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2,19,75,22,436 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெறும் ரூ.7000-த்தை வைத்து சிலை கடத்தல் மன்னன் போட்ட மாஸ்டர் பிளான்! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?