தென்காசியில் மிகப் பிரபல பரோட்டாக் கடைக்கு சொந்தமான குடோனுக்கு உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பரோட்டாக் கடை ஒன்று மிகவும் பிரபலமானது. தென்காசி குற்றால அருவியில் குளித்துவிட்டு அசைவ பிரியர்கள், அடுத்து செல்ல இருக்கும் இடமாக இருப்பது பிரானூரில் செயல்பட்டு வரும் பரோட்டாக் கடைக்கு தான்.
இந்நிலையில், இங்கு இயங்கி வரும் பரோட்டாக் கடையில் கலப்பட மற்றும் கெட்டுப்போன பொருட்களைக் கொண்டு உணவு சமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இதுகுறித்து சோதனை செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று சமையல் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்கு சென்றனர். அப்போது குடோனை சோதனை செய்வதற்கு கடையின் உரிமையாளர் அனுமதிக்கவில்லை, மேலும், குடோனை திறக்கமுடியாது என அவர் கூறியதால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
அடுத்த உத்தரவு வரும் வரை, குடோனைப் பயன்படுத்தக் கூடாது எனவும் தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து மீண்டும் மீண்டும் இந்தியாவுக்கு பறக்கும் ட்ரோன்கள்..