உத்தரபிரதேசத்தில் மகளின் பையில் கர்ப்பத்தை கண்டுபிடிக்கும் கருவி இருந்ததால், பெற்றோர் அந்தப் பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், கவுசம்பி அருகிலுள்ள அலம்பாத் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ். இவர் 21 வயதுடைய தன் மகளைக் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கிராமத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தியபோது அந்த உடல் காணவில்லை என்று கூறப்பட்ட நரேஷ் மற்றும் ஷோபா தம்பதியின் மகள் என தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். ஒரு சமயத்தில் தாங்கள் தான் கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நரேஷும் ஷோபாவும் இணைந்து தங்களின் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அடையாளத்தை மறைப்பதற்காக உடல் மீது ஆசிட் ஊற்றி கால்வாயில் தூக்கி எரிந்ததாகவும், இதற்கு நரேஷின் சகோதரர்கள் இருவர் உதவி செய்ததாகவும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும் தங்கள் மகள் பல ஆண்களுடன் போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், மகளின் பையில் கர்ப்பதைக் கண்டுபிடிக்கும் கருவி இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாகவும் நரேஷ் தெரிவித்தார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த மனைவியை தோளில் தூக்கியபடியே நடந்த கணவன்; உதவிய காவல்துறை!