தொடர் கனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற ஜூலை 16-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்யும் என்ற வானிலை முன் அறிவிப்பு காரணமாக, அம்மாநில அரசு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மூன்று நாள்கள் விடுமுறை அளித்துள்ளது.
பள்ளிகள் ஜூலை 14-ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேலும் மூன்று நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தொடர் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 14 முதல் ஜூலை 16-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஜூலை 18-ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகவே தெலுங்கானா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வருகிற 17-ம் தேதி வரை அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மராட்டியத்தில் கனமழை; பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு