Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது; வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது; வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது மற்றும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார்.

    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி:

    புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் அவர்களிடம் வழங்கினார்.

    வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது

    வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை செ. திவான், விடுதலை இராஜேந்திரன், நா. மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும்15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.

    மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது

    மறைந்த தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் அவர்களின் நூல்களுக்கு 15 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், திரு. கந்தர்வன் என்கிற நாகலிங்கம் அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, திரு. சோமலெ அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, முனைவர் ந. இராசையா அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை திரு. பிரகாஷ் அவர்களின் நூல்களுக்கு 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை / தமிழ்நாடு முதலமைச்சர், மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக அவர்களின் மரபுரிமையரிடம் வழங்கினார்.

    தமிழ்ச் செம்மல் விருது:

    2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சி. சிவசிதம்பரம் அவர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் ப. வேட்டவராயன் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த
    ம. நாராயணன் ஆகிய 38 தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் தமிழ்ச் செம்மல் விருதுடன், விருதுத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

    சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது:

    2021ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை
    திரு. செ. சுகுமாரன், திருமதி செ. இராஜேஸ்வரி, முனைவர் மு. வளர்மதி, முனைவர் இராக. விவேகானந்த கோபால், முனைவர் அ.சு. இளங்கோவன். முனைவர் வீ. சந்திரன், முனைவர் ரா. ஜமுனா கிருஷ்ணராஜ்,
    பேராசிரியர் தமிழ்ச்செல்வி, மறைந்த திரு. ந. தாஸ், முனைவர் மா. சம்பத்குமார் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், தமிழ்நாடு முதலமைச்சர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுடன் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல்  துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்  துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    2024ல் டி.என்.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வு அறிவிப்பு; மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....