நாட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும் என நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிதி அயோக் உறுப்பினரான வி.கே. பால் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், விமானப் போக்குவரத்து தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடரும் என்றும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
27-28 % மக்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளதாகவும், மூத்த குடிமக்கள் உள்பட அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நிதி அயோக் உறுப்பினரான வி.கே. பால், பூஸ்டர் டோஸ் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மாமல்லபுரம் வந்து பயிற்சி மேற்கொண்ட 50 இளம் புத்தமத துறவிகள்!