Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாமல்லபுரம் வந்து பயிற்சி மேற்கொண்ட 50 இளம் புத்தமத துறவிகள்!

    மாமல்லபுரம் வந்து பயிற்சி மேற்கொண்ட 50 இளம் புத்தமத துறவிகள்!

    துறவறம் பூண்ட 50 இளம் புத்தமத துறவிகள் மாமல்லபுரம் வந்து பயிற்சி மேற்கொண்டனர். 

    அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து முடித்த 50 மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு சமூக சேவை செய்யும் எண்ணத்தில் புத்தமத கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு புத்த மதத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 

    அப்படி புத்தமதத்தை ஏற்ற கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு புத்த மடத்தில் துறவிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    சுமார் 20 முதல் 26 வயதுடைய அம்மாணவர்கள் அனைவரும் புத்தமத கோட்பாடுகளை பின்பற்றும் விதமாக தலைக்கு மொட்டை அடித்த நிலையில் இருக்கின்றனர். மேலும் இவர்கள் புத்தமத பாரம்பரிய உடையான காவி உடையை அணிந்து கொண்டு இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். 

    மாமல்லபுரத்தில் இருக்கும் அழகிய கலை சிற்பங்களை பார்த்து அவர்கள் ரசித்தனர். இந்த 50 புத்த துறவிகளுடன் மூத்த புத்தபிட்சுகளும் வந்திருந்தனர். மேலும் அவர்கள் சில சிற்பங்களை காட்டி சில விளக்கங்களை அளித்து பயிற்சி கொடுத்தனர். 

    தமிழகத்தில் மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....