செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு நீர் ஆதாரம் தரும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இதுவரை 500 கனஅடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை 3 மணி முதல் 1000 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உபரி நீர் செல்லும் கால்வாய் அருகில் உள்ள கிராம மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 18.90 அடியாக இருக்கிற இந்த நிலையில், ஏரியின் நீர் அளவை 21 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ரெட் அலட்டுக்கு மேல் சீர்காழியில் இரண்டு மடங்கு மழை! இந்த நூற்றாண்டின் உச்சம் என வானிலை மையம் தகவல்