சிறுநீரகத்தில் கற்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு, நோயாளியின் சிறுநீரகமே காணாமல் போன அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில், அலிகாரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை அகற்றுவதற்காக சுரேஷ் சந்திரா என்ற நபர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சில மாதங்களிலேயே அவருக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மற்றொரு மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் இடது பக்க சிறுநீரகம் இல்லாமல் இருந்ததை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுரேஷ் சந்திரா கூறுகையில், கடுமையான வயிற்று வலி காரணமாக அவர், ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்றே அறுவை சிகிச்சை செய்ததாகவும், அடுத்து ஏப்ரல் 17 ஆம் தேதி மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கடும் வலி ஏற்பட்டதால் அவர், வேறொரு மருத்துவரை அணுகியதாகவும், அப்போது அங்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் இடது பக்கம் சிறுநீரகம் இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும் கூறினார்.
தொடர்ந்து அவர், இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டபோது, யாரும் பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹர்திக் பாண்டியா அடுத்த நிரந்தர கேப்டானாக வாய்ப்பு: முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து