பள்ளிகளில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவர்களை எடுக்க செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நாளை (ஆகஸ்ட் 11) தொடங்கி வைக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நாளை (ஆகஸ்ட் 11) காலை 10.30 மணியளவில் அனைத்து பள்ளிகளும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவர்களை எடுக்க செய்ய வேண்டும். விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது குறித்த விவரங்களை நாளை பிற்பகலில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வல்லுனர் குழுவே பரிந்துரைத்த பிறகும், தமிழக அரசு தாமதிப்பது ஏன்?- பாமக நிறுவனர்