Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதனியார் கல்லூரி மாணவிகள் முடியை வெட்டி நூதன போராட்டம்; எதற்கு தெரியுமா?

    தனியார் கல்லூரி மாணவிகள் முடியை வெட்டி நூதன போராட்டம்; எதற்கு தெரியுமா?

    கேரள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் முடியை வெட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    கேரள மாநிலம், கோட்டயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவரும் மாணவியும் கல்லூரிக்கு வெளியே உள்ள கோட்டயம் சந்திப்பு பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது 3 மாணவர்கள் அங்கு சென்றனர். மேலும் மாணவரிடமும் அவரிடத்து தோழியிடமும் ஈவ்டீசிங் செய்தனர். 

    இந்தச் சம்பவத்திற்கு மாணவரும் அவரது தோழியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 மாணவர்கள், மாணவரையும் அவரது தோழியையும் தாறுமாறாக தாக்கினர். 

    பிறகு இந்தச் செய்தியை அறிந்த அக்கல்லூரி மாணவ-மாணவிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பங்கேற்ற மாணவிகள் சிலர் தங்களது முடியை வெட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் இந்தக் காட்சிகளை காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்தக் காட்சிகள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைதியத்தில், 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடைம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் வெளியாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....