தனது தாயின் கடைசி ஆசைக்காக மகன் செய்த செயல் பார்ப்போர் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
ஸ்டீபனி நார்த்காட் என்ற பெண்மணி புற்று நோய் பாதிப்பால் வாழக்கையின் இறுதி நாட்களில் உள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்த பெண்மணி, அவரின் கடைசி ஆசையாக தனது மகனின் பட்டமளிப்பை காண வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தனது தாயின் ஆசையை நிறைவேற்ற நினைத்த மகன் டால்டன் ஒரு புதுவிதமான முறையை கையாண்டுள்ளார். அந்த தாயின் மகன் ஒரு சிறிய அளவிலான பட்டமளிப்பு விழாவையே நடத்தி, தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
அதற்காக அவர், தனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் மருத்துவமனை வளாகத்திலேயே பட்டமளிப்பு விழாவை ஏற்பாடு செய்தார். இதனை அவரது தாய் அருகில் இருந்தபடியே, தனது மகன் பட்டம் பெறுவதை நேரில் கண்டு கண்கலங்கி மகிழ்ந்தார். மேலும் தாயும் மகனும் சேர்ந்து நடனமும் ஆடினர். அவர்கள், இருவரும் வெளிப்படுத்திய அன்பு பார்ப்பவர்கள் மனதை நெகிழச் செய்தது. இந்த நெகிழ்ச்சியான தருணம், நடந்து முடிந்த ஒரு வாரத்தில் அந்த தாய் உயிரிழந்துள்ளார்.
இந்தக் காணொளியை, ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
This MOTHER had just one FINAL WISH. pic.twitter.com/PVA9tK2X0p
— Awanish Sharan (@AwanishSharan) June 26, 2022