Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு; பங்குச்சந்தை நிலவரம்!

    இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு; பங்குச்சந்தை நிலவரம்!

    தொடர்ந்து ஆறாவது  நாளாக இன்றும் பங்குச்சந்தைகள் சரிவில் முடிந்துள்ளன. உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் பதற்றத்தினால் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ந்து வருகின்றன. கச்சா எண்ணைக் கொள்முதலில் மூன்றாவது பெரிய நாடகத் திகழும் இந்தியாவிற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்கமும், அதனைக் குறைக்க அதிகப்படுத்திய வட்டி விகிதங்களும் இந்திய வர்த்தகத்தினை மட்டுமல்லாது உலக அளவிலான வர்த்தகத்தினையும் பாதித்து வருகின்றன.

    வியாழக்கிழமையான இன்று, நிப்டி 25.85 புள்ளிகள் குறைந்து 15,782.15ஆகவும், சென்க்செஸ் 136.69 புள்ளிகள் குறைந்து 52793.62ஆகவும் உள்ளது. 

    ஹிட்டாச்சி இந்தியா, அதானி பவர், கேபிஐ கிரீன் எனர்ஜி, அல்சட்டம் டீ&டி  இந்தியா போன்ற நிறுவனங்கள் இன்று அதிக ஏற்றத்தில் முடிந்தன.

    அதானி பவர், எனர்ஜி டெவெலப்மென்ட் கம்பெனி, கர்மா எனர்ஜி போன்ற நிறுவனங்கள் அதிக இறக்கத்தினைச் சந்தித்துள்ளன.

    டாலருக்கு நிகரான இந்திய மதிப்பில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல், டாலருக்கு 77.40 ரூபாயாக உள்ளது.

    தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது, 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 71 ரூபாய் குறைந்து 4,764 ரூபாயாகவும், சவரனுக்கு 568 ருபாய் குறைந்து 38,112 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.60 ருபாய் குறைந்து  63.40 ரூபாயாகவும், சவரனுக்கு 12.80 ருபாய்க் குறைந்து 507.20 ரூபாயாகவும் உள்ளது.

    சில மாதங்களாக சரிவினைச் சந்தித்து வந்த கிரிப்டோகாயின்கள் இன்று சிறிதளவு ஏற்றம் கண்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, பிட்காயின் 23,62,800 ரூபாயாகவும், எத்தீரியம் 1,62,000 ரூபாயாகவும் உள்ளது. கிரிப்டோ வர்த்தகத்தில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றிருந்த டெரா (லுனா) என்கிற கிரிப்டோவானது, யாரும் எதிர் பாக்காத அளவிற்கு சரிந்து புஜ்ஜியத்தினை நெருங்கியுள்ளது. இந்த லுனா கிரிப்டோவானது இந்திய மதிப்பில் அதிகபட்சமாக 10,000 வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வால் அந்த கிரிப்டோவில் முதலீடு செய்திருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    டான் திரைப்படம் இளைஞர்களின் பார்வையில் எப்படி இருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....