சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா, சமுதிரக்கனி, சூரி உள்ளிட்டோர் நடித்த டான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி; தயாரித்தவர் அலிராஜா சுபாஸ்கரர்; இசையமைப்பாளர் அனிருத் . படத்தை பார்த்துவிட்டு இளைஞர்கள் கூறிய கருத்துக்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்.
- சிவகார்த்திகேயனின் இந்த படம் மற்ற படங்களை விட தனித்துவமாக இருக்கிறது.
- முதல் பாதி நல்ல நகைச்சுவை உள்ளது. இரண்டாம் பாதியில் நல்ல உணர்ச்சிவசப்படக் கூடிய காட்சிகள் உள்ளன.
- இந்தப் படம் கண்டிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
- சமுதிரக்கனி, எஸ்.ஜே சூர்யா மிக நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
- குடும்பமாக சென்று பார்த்திட நல்ல படம்.
- நல்ல கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிள்ளைகள் பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டி இருகிறார்கள்.
- சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே இந்தப்படம், அவர் அதிக உணர்ச்சிவசப்பட்டு நடித்து, மக்களின் கண்களில் கண்ணீர் வரவழித்த படம் இதுவாக தான் இருக்கும்.
- டான் என்ற பெயர் திரைப்படத்திற்கு பொருந்தாமல் இருந்ததோ என்று தோன்றியது. பள்ளி மற்றும் கல்லூரியில் அழைக்கப்படுகிறார் ஆனால், ஆழமான கருத்து ஏதும் இல்லாததுபோல் உள்ளது.
- அனிருத் தன்னால் முடிந்த அளவு படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.
- அனிருத் இசை நன்றாக இருக்கிறது. இருப்பினும் இரண்டு மூன்று பாடல்கள் தான் இருக்கின்றன.
- சிவகார்த்திகேயனின் இந்தப்படம் நிச்சயம் குடும்ப ரசிகர்களை கவரும்.
- முதல் பாதியில் நன்கு சிரித்தோம் இரண்டாம் பாதியில் படம் அழவைத்துவிட்டது.
- தந்தையை போற்றும் படமாக இருக்கிறது. தந்தை மகன் பாசப் பிணைப்பு பற்றி பேசிடும் படமாக இது நிச்சயம் இருக்கும் என்று தெரிவித்தனர்.
- சிலர் சீரியல் கதை போன்று உள்ளதாகவும் தெரிவித்தனர்.
- எல்லாருடைய வாழ்க்கையிலும் உள்ள எதார்த்தத்தை படத்தில் காட்டியுள்ளனர் என்று பல இளைஞர்கள் தெரிவித்தனர்.
61 வருடங்களுக்குப் பிறகும், பல திரைப்படங்களில் இப்பாடல் ஒலிக்கிறது; ஏனென்றால்…….?
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.