Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்

    இலங்கையில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

    இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றப்பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்றம் கூட்டம் இதுவாகும். 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், ஜூலை 9-ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

    அதன்படி, கோத்தபய ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக நேற்று பதவியேற்றார்.

    இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றதைத் தொடர்ந்து இன்று இலங்கையில் நாடாளுமன்றம் கூடுகிறது. இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என இலங்கை நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன வலியுறுத்தியுள்ளார். 

    கோத்தபய ராஜபக்சே ராஜிநாமா- இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....