Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கையில் அவசர நிலை பிரகடனம்

    இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

    இலங்கையில் இன்று முதல் அவசர நிலையை அமல்படுத்துவதாக அந்நாட்டு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.

    இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே கடந்த 15-ம் தேதி தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்ததார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக ஜூலை 15-ம் தேதி அன்றே பதவியேற்றார்.

    அதன்பின்னர், கடந்த சனிக்கிழமை இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இக்கூட்டமானது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சேவின் ராஜிநாமா கடிதம் வாசிக்கப்பட்டது. 

    மேலும், இலங்கை நாடாளுமன்றம் வரும் 19-ம் தேதி மீண்டும் கூடும் எனவும், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்களும் 19-ம் தேதியே ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவித்தார். அதன்பின்னர், அன்றைய கூட்டம் கலைக்கப்பட்டது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர்கள் அனுர யாப்பா அபேவர்தன, டலஸ் அழகப்பெரும, முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்றோர் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    மேலும், சட்ட ஒழுங்கைப் பாதுகாத்தல், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் சேவைகளை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இன்று முதல் அவசர நிலை அமல்ப்படுத்தப்படுவதாக இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். 

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- 3 பேர் படுகொலை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....