Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதீபாவளியை முன்னிட்டு சுமார் 55 சதவீதம் ஊதிய உயர்வு; வியக்க வைத்த நிறுவனம்!

    தீபாவளியை முன்னிட்டு சுமார் 55 சதவீதம் ஊதிய உயர்வு; வியக்க வைத்த நிறுவனம்!

    ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமானது, தனது விமானிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு சுமார் 55 சதவீதம் அளவுக்கு ஊதிய உயர்வு அறிவித்துள்ளது.

    பண்டிகை காலங்களில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ், பரிசு பொருட்கள் போன்றவற்றை தருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்து வருகிறது. 

    அந்த வகையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகளின் மாத ஊதியம் 55சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு, சுமார் 80 மணி நேரம் விமானத்தை இயக்கும் விமானிகள் ரூ.7 லட்சம் வரை ஊதியமாக பெறும் வகையில் ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தனது கேப்டன்களுக்கான ஊதியம் 80 மணி நேரம் விமானத்தை இயக்குவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய ஊதிய உயர்வானது வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘பேட்டி கொடுக்க கூடாது’ தடுத்த காவல்துறை; எகிறிய எடப்பாடி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....