Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புரோமோஷனுக்காக ஜப்பானுக்கு பறந்த 'ஆர்ஆர்ஆர்' படக்குழு.. அங்கும் சாதிப்பாரா எஸ்.எஸ் ராஜமௌலி?

    புரோமோஷனுக்காக ஜப்பானுக்கு பறந்த ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு.. அங்கும் சாதிப்பாரா எஸ்.எஸ் ராஜமௌலி?

    ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை விளம்பரப் படுத்துவதற்காக ஜப்பானிற்கு படக்குழு சென்றுள்ளது. 

    பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

    கொஞ்சம் நெஞ்சம் வரவேற்பை பெறவில்லை. மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது திரைப்படத்தைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

    மேலும், சமீபத்தில் இந்தத் திரைப்படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கான பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை ஆர்ஆர்ஆர் திரைப்படக்குழுவே தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. 

    சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, விஎஃப்எக்ஸ் என ஆஸ்கரின் அனைத்து வகை விருதுகளுக்கும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் போட்டியிடுகிறது.

    இந்நிலையில், நாளை மறுநாள் (அக்டோபர்-21) ஜப்பானில் ஆர்ஆர்ஆர் திரைப்படம்  வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு, படக்குழுவினர் திரைப்படத்தை விளம்பரம் செய்ய தற்போது படக்குழு ஜப்பானுக்கு பறந்துள்ளது. 

    இதையும் படிங்க: ‘நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்’ கடவுளிடம் கோரிக்கையையும், ரசிகர்களிடம் கேள்வியையும் முன்வைத்த விஜய் ஆண்டனி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....