கடவுள் முன் வந்தால் என்ன கேட்பீர்கள் என விஜய் ஆண்டனி ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுடன் உலவும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் -2, கொலை, ரதம், மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்ககளில் நடித்து வருகிறார்.
இவர் சமீப காலமாக ட்விட்டரில் சமூகம் சார்ந்து பல கருத்துகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்து வருகிறார். இளைஞர்கள் பலரும் இவரின் கருத்துகளை முன்மொழிந்தும் வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் ‘பக்கத்தில் கடவுள் முன் வந்தால் என்ன கேட்பீர்கள்’ என கேட்டுள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடவுள் என் முன்னாடி, வந்தா, சாதி, மதம், கோவில், சாமியார் எல்லோரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை, கொள்ளையை ஒழித்துவிட்டு பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்னு கோரிக்கை வைப்பேன். நீங்க என்ன கேட்பீங்க?” என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : ‘சுயநலமா விளையாடாதீங்க’ கோலிக்கு உள்குத்தாக ‘அட்வைஸ்’ செய்த கம்பீர்! கடுப்பில் ரசிகர்கள்…