Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த புதிய மாற்றம்

    காங்கிரஸ் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! 24 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த புதிய மாற்றம்

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றார். 

    கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமடன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தோல்வி அடைந்ததால், அவர் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

    இந்தத் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாரும் போட்டியிடவில்லை. 

    9,915 மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில் 9,500 பேர் வாக்களித்தனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். மேலும், 416 வாக்குகள் செல்லத்தாவை என அறிவிக்கப்பட்டன. 

    காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு காந்தி-நேரு குடும்பத்தைச் சேராத கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே வெற்றி வாகை சூடினார். 

    வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் கார்கே என்பதை செய்தியாளர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘என்னை விமர்ச்சிப்பவர்களை செருப்பால் அடிப்பேன்’ கொதித்தெழுந்த பவன் கல்யாண்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....