புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்றைய கொரோனா தொற்று பாதிப்பு 3,230-ஆக இருந்த நிலையில், இன்று 3,615 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகமாகும் .
இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,79, 88 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 ,979 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,584 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,40,9,525 பேர் குணமடைந்துள்ளனர்.
காலை 9 மணி வரை அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 13,87,533 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, நாடு முழுவதும் இதுவரை 2,17,96,31,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்த குழந்தை; போதை காரணமா?