சிகப்பு நிற காரில் வந்த சில நபர்கள் விஷால் வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் விஷால் தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ மற்றும் ‘ஏஏஏ’ திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு, லத்தி வெளியீடு என திரைப்படங்களிலும், சங்க வேலைகளிலும் பிஸியாக இருந்து வருகிறார், விஷால். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை விஷால் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலானது நடிகர் விஷால் வீட்டில் இல்லாதபோது நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து, K-4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறை சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிகப்பு நிற காரில் வந்த சில நபர்கள் விஷால் வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய கத்ரீனா…இணையத்தில் வைரலான காட்சி!