Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுப்பையில் எலும்புக்கூடு இருந்ததன் பின்னணி என்ன? சென்னையில் அதிர்ச்சி!

    குப்பையில் எலும்புக்கூடு இருந்ததன் பின்னணி என்ன? சென்னையில் அதிர்ச்சி!

    தமிழகத்தின் தலைநகரான சிங்காரச் சென்னையில், அவ்வபோது பரபரப்பான சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குப்பையில் மனித எலும்புக் கூடுகள் கிடந்த சம்பவம், சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்பையில் எப்படி எலும்புக் கூடுகள் வந்தது என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    சென்னை, சூளையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சூளைப் பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை மாநகராட்சி இராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், சென்னையில் உள்ள வேப்பேரி கலத்தி அப்பா பிரதான சாலையில் குப்பைகளை அகற்றுவார்கள். குறிப்பாக, இரவு நேரத்தில் வீதி வீதியாக சென்று குப்பைத் தொட்டியில் நிரம்பியிருக்கும் குப்பைகளை அகற்றி வருவது வழக்கமான ஒன்று.

    இந்த நிலையில் நேற்று இரவு எப்பொழுதும் போல குப்பை அகற்றும் பணி நடந்துள்ளது. அப்போது, கலத்தி அப்பா பிரதான சாலையில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில், பிளாஸ்டிக் கோணிப் பையில் மனித எலும்புக் கூடு மற்றும் 4 எலும்புத் துண்டுகள் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

    bone

    இந்தத் தகவலின் அடிப்படையில், வேப்பேரி காவல் நிலைய அதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அங்கு குப்பைத் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடு மற்றும் நான்கு எலும்புத் துண்டுகளை கைப்பற்றினார். பிறகு, இந்த எலும்புக் கூடுகள் சென்னையில் உள்ள அரசு கீழ்ப்பாக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, எலும்புக் கூடுகளை உடற்கூறு ஆய்வு செய்த பின்னர் யாருடையது, அந்த நபர் யார் என்பது தெரியவரும்.

    இந்த சம்பவத்தால், சூளைப் பகுதி முழுவதுமாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. எலும்புக் கூடுகள் அனைத்தும் வார்னிஷ் அடித்து வைக்கப்பட்டிருக்கும் காரணத்தால், மருத்துவ மாணவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்தும் எலும்புக் கூடுகளா இருக்குமோ என்றும், எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்ட தெருவில் நான்கிற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பதால் அவர்கள் சோதனை மேற்கொண்டு குப்பைத் தொட்டியில் வீசி இருப்பார்களா என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள் வேப்பேரி காவல் துறையினர்.

    நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன் கான் அப்பாவி: திசைமாறியது வழக்கு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....