தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று (செப்டம்பர் 13) அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமப்படுகின்றனர் என மக்கள் நீதி மையம் தெரிவித்திருந்தது.
மேலும், இதுகுறித்து நேற்று மக்கள் நீதி மையம் தனது ட்விட்டர் பதிவில், ‘வழக்கமாக மருந்து கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் தமிழ்நாடு மருத்துவக் கழகம், சில மாதங்களாக போதிய மருந்துகளை விநியோகம் செய்வதில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:ரெய்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், கிலோக் கணக்கான நகைகள் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்
உயிர்காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். அதனால், உடனடியாக போதிய அளவு மருந்து கொள்முதல் செய்து, மருத்துவமனைகளுக்கு விநியோகிக்குமாறு தமிழக அரசை மக்கள் நீதி மையம் வலியுறுத்துவதாக’ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் எங்கேயும் தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டாலும் அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.