Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ரெய்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், கிலோக் கணக்கான நகைகள் - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

    ரெய்டில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், கிலோக் கணக்கான நகைகள் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

    அ.இ.அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் பணமும், 1872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்களும் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தப் பிறகு அ.இ.அ.தி.மு.க அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அவ்வபோது லஞ்ச ஓழிப்பு சோதனை அரங்கேறுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 

    இந்நிலையில், நேற்று காலை அ.இ.அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். 

    இதையும் படிங்க : ‘மதுக்கடைகளை  மூடினால் தான் மாணவர்களைக் காப்பாற்ற முடியும்’ – அன்புமணி வருத்தம்

    இந்த சோதனையில் 18.37 லட்சம் ரூபாய் பணம், 1872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோகிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன.

    மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள்(Documents), 1 வன் தட்டு(Hard Disk), 1 விரலி நினைவகம்(Pen Drive), 2 – தொலைபேசிகள்(Phones)மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள்(Bank Safe Deposit Box Keys) இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    தொடரும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை – கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....