கோபித்த ஆசிரியரிடம் மாணவன் மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அந்தக் காணொளியில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை கோபமாக அமர்ந்திருக்கிறார். அந்த ஆசிரியையிடம் சென்ற மாணவன் ஒருவன் மன்னிப்பு கேட்கிறான். மேலும், தான் இதுபோன்ற தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று சொல்லி ஆசிரியையின் கன்னத்தில் முத்தமிட்டு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறான்.
இதற்கு அந்த ஆசிரியை, ‘இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என நீ பலமுறை சொல்லியிருக்கிறாய்; ஆனால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்கிறாய். நான் உன்னுடன் பேசமாட்டேன்’ என சிறுவனிடம் கோபமாகச் சொல்கிறார்.
அதற்கு அந்த மாணவன், ஆசிரியையின் கோபத்தை குறைக்க கெஞ்சி மன்றாடுகிறான். ஆசிரியை மீண்டும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறான். தன்னிடம் பேசுமாறு கூறியும் இனி தவறு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தும் ஆசிரியையின் கன்னத்தில் முத்தமிடுகிறான்.
இந்த ஆசிரியை-மாணவன் காணொளி தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ऐसा स्कूल मेरे बचपन में क्यों नहीं था 😏😌 pic.twitter.com/uHkAhq0tNN
— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) September 12, 2022