புதுச்சேரி நகரப்பகுதியில் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசர் கைது செய்தனர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரில் அபிராமி ஸ்வீட்ஸ் கடை உள்ளது. இங்கு தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து உருளையன்பேட்டை ஆய்வாளர் பாபுஜி உத்தரவின்படி உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் கிரைம் போலீசார் பிரேம்குமார், சக்திவேல், செல்லதுரை, மோகன் ஆகியோர் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது 3 நம்பர் லாட்டரி சீட் விற்ற ராஜாராமன் என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
அவரது வாக்குமூலத்தின் படி காராமணிகுப்பத்தில் லாட்டரி சீட்டு விற்ற ஆறுமுகம், நெல்லிதோப்பில் லாட்டரி சீட்டு விற்ற நடராஜ், சாரத்தில் லாட்டரி சீட்டு விற்ற பழனிச்சாமி ஆகிய மூவரையும் கைது செய்து அனைவரிடமிருந்தும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 15,000 பறிமுதல் செய்து நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாழடைந்த கிணறு.. 40 அடி ஆழம்; தவறி விழுந்த பெண்ணின் கதறல் கேட்டு பொதுமக்கள் செய்த செயல்